தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சீனாவில் கொரோனா வைரஸ் உலகம் முழுதும் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வைரஸை பரப்பும் நோக்கில் ஒருவர் நடந்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.
அதில் 2பேர் முகத்தில் மாஸ்கை அணிந்து கொண்டு மருத்துவமனையில் நுழைந்து அங்கிருந்த 2பெண் ஊழியர்களை அச்சுறுத்தும் விதமாக மாஸ்கை கழட்டி விட்டு இருமுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.மருத்துவமனை பெண் ஊழியர்கள் பதறி அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் ஏற்கனவே வேகமாக பரவி வரும் நிலையில் நோயை பரப்பும் நோக்கில் மர்ம நபர்கள் இது போன்று செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.