தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சீனாவில் கொரோனா வைரஸ் பரவ உள்ளதை கண்டிபிடித்த மருத்துவர் லீ வென்ங்லிங் அந்நோய் தாக்குதலால் பரிதாபமாக மரணமடைந்தார்.
சீனாவில் வுஹான் நகரில் முதல் முதலில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தவர் மருத்துவர் லீ வென்ங்லிங். ஆனால் அதிகாரிகளின் நெருக்கடியால் அதுபற்றி வெளியே சொல்லவில்லை.
ஆனால் சில நாட்கள் கழித்து லீக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் அதுகுறித்த விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டார்.
இந்நிலையில் மருத்துவர் லீ வென்ங்லிங் சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து அறிந்த லீயிடம் சீனா அரசு மன்னிப்பு கேட்டதும், மக்களின் நாயகனாக அவர் கொண்டாடப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.