உலகம்

சாப்பிட வந்த வாடிக்கையாளர் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய ஊழியர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரித்தானிய நாட்டில் ஹோட்டலில் சாப்பிட வந்த வாடிக்கையாளர் மீது மிளகாய் பொடி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் ஹேவுட் தந்தூரி பிளாசா என்ற இந்திய உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் இலவசமாக கபாப் கொடுக்க சொல்லி கேட்க ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ALSO READ  தொலைக்காட்சி நிருபரின் மைக்கை கடித்த பாம்பு

மற்ற ஊழியர்கள் சமாதானப் படுத்திக் கொண்டிருக்க, வந்திருந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் திட்டியதன் காரணமாக ஹோட்டல் ஊழியர் அவரை அடித்துள்ளார். அந்த ஊழியருக்கு ஆதரவாக மற்றொரு ஊழியர் சமையலறையில் இருந்த மிளகாய் பொடியை கொண்டு வந்து சண்டையிட்ட வாடிக்கையாளர் முகத்தில் வீச அந்த இடமே பரபரப்பானது.

பின்னர் பிரச்சனைகளான ஊழியர்களை ஹோட்டலில் இருந்து வெளியேற்றினர். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி சிலர் உணவக ஊழியர்களுக்கு ஆதரவாகவும், பலர் எதிர்ப்பு தெரிவித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் உறைந்த தந்தை- நடந்தது என்ன ?? 

naveen santhakumar

முதன்முறையாக 90 வயது மூதாட்டிக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி:

naveen santhakumar

கண் சொட்டு மருந்து – இலங்கை அரசு புகார்!

Shanthi