பிரித்தானிய நாட்டில் ஹோட்டலில் சாப்பிட வந்த வாடிக்கையாளர் மீது மிளகாய் பொடி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய நாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் ஹேவுட் தந்தூரி பிளாசா என்ற இந்திய உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் இலவசமாக கபாப் கொடுக்க சொல்லி கேட்க ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மற்ற ஊழியர்கள் சமாதானப் படுத்திக் கொண்டிருக்க, வந்திருந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் திட்டியதன் காரணமாக ஹோட்டல் ஊழியர் அவரை அடித்துள்ளார். அந்த ஊழியருக்கு ஆதரவாக மற்றொரு ஊழியர் சமையலறையில் இருந்த மிளகாய் பொடியை கொண்டு வந்து சண்டையிட்ட வாடிக்கையாளர் முகத்தில் வீச அந்த இடமே பரபரப்பானது.
பின்னர் பிரச்சனைகளான ஊழியர்களை ஹோட்டலில் இருந்து வெளியேற்றினர். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி சிலர் உணவக ஊழியர்களுக்கு ஆதரவாகவும், பலர் எதிர்ப்பு தெரிவித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்