தென்கொரியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசு கவலை அடைந்துள்ளது.
பொதுவாக ‘சிங்கிள் தான் கெத்து’ இந்த வாசகத்தை ஆண்கள் தான் பல்வேறு இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் தென்கொரியாவில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.
அங்கு திருமணத்தில் விருப்பம் இல்லாத இரண்டு பெண்கள் ‘நோ மேரேஜ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். டேட்டிங் திருமணம் குழந்தை செக்ஸ் என இந்த நான்கு விஷயங்களுக்கும் நோ சொல்லும் பெண்கள் இந்த அமைப்பில் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் இதுவரை 37 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். மேலும் சமீபத்தில் தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 44 சதவீத பெண்கள் மட்டுமே திருமணம் மற்றும் அதன் பிறகான வாழ்க்கையில் ஆர்வம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் தென்கொரியாவில் மணப்பெண்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கே ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.