தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பரிபா அதெல்காஹ், ரோலண்ட் மார்சல் இருவரும் ஆராய்ச்சியாளர்கள்.
இவர்களுக்கு 60 வயது கடந்த நிலையில் 38 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், பரிபா ஈரானுக்கு ஆராய்ச்சி நடத்த சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டு, அங்குள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக ஈரான் சென்ற ரோலண்ட் மார்சலும் கைது செய்யப்பட்டார்.பரிபா மீதான உளவு குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டாலும், இருவரும் ஈரான் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தனித்தனியே மனு அளித்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.