தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா வைரஸ் அச்சத்தால் சீன நாட்டவர்களுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்று அறிவுறுத்தி உள்ளது.
சீன நாடு தொடங்கி உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸுக்கு சீனாவில் மொத்தம் 131 பேர் பலியாகி உள்ளனர்.
இரண்டு நாட்களில் புதிதாக 3000 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.மொத்தம் 5300 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனா மட்டுமின்றி பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளையும் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில் பல்வேறு விதிமுறைகள் சீன நாட்டவர்களுக்கு விதித்து வருகிறது. இந்நிலையில் கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சீன நாட்டு மக்களுக்கு உணவு வழங்கப்படாது என அறிவுறுத்தி நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளது.. இது காண்பவர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.