ஜெர்மனியில் தன் கணவனை 8 வருடங்களுக்கு பிறகு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
அகமதாபாத்தைச் சேர்ந்த நித்தின் என்ற இளைஞர் வேலை விஷயமாக கடந்த 2012ம் ஆண்டு மொரிசியஸ் நாட்டிற்கு சென்ற போது அங்கு ஜெர்மனியை சேர்ந்த அலானா என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பு காதலாக மாறி இருவரும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின் ஜெர்மனியில் செட்டில் ஆனார்கள்.
இந்நிலையில் 8 வருடங்கள் கழித்து பாரம்பரிய முறைப்படி நித்தினை திருமணம் செய்ய அலானா விரும்பியுள்ளார்.
நித்தி எனும் இதற்கு சம்மதம் தெரிவிக்க கடந்த 22ஆம் தேதி இந்த தம்பதியினர் அகமதாபாத் இருந்து வந்துள்ளனர்.
அங்கு பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
திருமணத்துக்கான ஏற்பாடுகளை கண்டு வியந்த அலானா இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவு என மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.