ரஷ்யாவில் தந்தையை கொலை செய்த மூன்று மகள்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா ஏஞ்சலினா மற்றும் மரியா கச்சதூர்ன் ஆகிய மூன்று பெண்களும் சகோதரிகள் ஆவர். இவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு தூக்கத்தில் இருந்த தங்களது தந்தையை சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரிடம், தங்களது தந்தை நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால் தற்காப்பிற்காக தாங்கள் கொலையில் ஈடுபட்டதாக மூன்று சகோதரிகளும் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
ரஷ்யா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மூன்று பெண்களுக்கும் ஆதரவாக 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.
இதனைக் கண்ட எதிர்தரப்பு மனுதாரர், மூன்று சகோதரர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.