உலகம் மருத்துவம்

பிறந்து 30 மணிநேரமே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகை அச்சுறுத்திவருகிறது கொரோனா வைரஸ். இதற்கான தடுப்பு மருந்தை இன்று வரை மருத்துவர்கள் கண்டறியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்குகிறது. இதுவரை 24,500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 492 பேர் பலியாகி உள்ளனர்.

ALSO READ  வழுக்கை தலைக்கு ஆதிமருந்தாகும் மாதுளை பூ

இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. கொரோனா வைரஸின் பரவும் தலைநகரான வூஹானில் உள்ள மருத்துவமனையில் பிறந்து 30 மணி நேரமே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

தாய் வழியாக குழந்தைக்கும் பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் குழந்தையின் தாய், பிரசவத்திற்கு முன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகியிருந்தது. அதன் காரணமாகவே குழந்தைக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று சீன செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

ALSO READ  வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களிடம் ஆலோசனை பெற புதிய மொபைல் ஆப்...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மிகமூத்த வயது நபர் 90வயதானவர் என்றும், இந்த வைரஸால் இறந்தவர்கள் 80% பேர் 60மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆரோக்கியம் தரும் ஆளிவிதை

Admin

உலக அன்னையர் தினம்.. அன்னைக்கு செய்யவேண்டியவை..

naveen santhakumar

பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் விமான போக்குவரத்து தடை : உலக நாடுகள் அறிவிப்பு 

News Editor