சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 27 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் வுஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸிற்கு 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் simpsons cartoon மற்றும் asterix comics ஆகியவற்றில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து 27 வருடங்களுக்கு முன், அதாவது 1993 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாக பரவியது.
மேலும் இதுகுறித்த தகவல்களை ஆய்வு செய்ததில் இவை அனைத்தும் முற்றிலும் பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கார்ட்டூன்களில் அதில் 1993 ஆம் ஆண்டில் ஜப்பானில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய ஒசாகா காய்ச்சல் பற்றிய காட்சிகளே இடம்பெற்றுள்ளன என்றும், அதனை நமது இணையவாசிகள் எடிட் செய்து கொரோனாவாக மாற்றி சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
ஏற்கனவே போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் சமூக வலைதளங்கள் மிகவும் அக்கறை எடுத்து வரும் வேளையில், இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதால் மக்கள் பீதியடைந்து மிகவும் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.