தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கொளத்தூர் தொகுதியில் வைகோ பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் மு.க ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் காட்டப்பட்டுள்ளனர் என்று கூறினார். மேலும் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக அமர்வார் என்றும் வைகோ தெரிவித்தார்.
The post 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெறுவார்…! appeared first on Tamil Thisai.