தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதியில் நேற்று 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது, இருவரும் தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.கடந்த 3 ஆண்டுகளில் ஈராக்கில் நடந்த முதலாவது தற்கொலைப்படை தாக்குதல் இதுவே ஆகும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.