விண்வெளிக்குச் செல்லும் 5-வது இந்தியர் என்ற பெருமையை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் சஞ்சால் கவான்டே பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் விண்வெளி சுற்றுலா நிறுவனமான வர்ஜின் கேலக்டிக் தயாரித்த ராக்கெட் விமானம் மூலம் அதன் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன், இந்தியவம்சாவளி பெண் சிரிஷா பண்ட்லாஉள்ளிட்ட 6 பேர் கடந்த வாரம் விண்வெளிக்குச் சென்று வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.
அடுத்த ஆண்டு முதல் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல பிரான்சனின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சஞ்சால் கவாந்தே அமேசான் நிறுவனர் ஜெப் பெசாசுடன் விண்வெளிக்கு இன்று பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் இந்தியாவிலிருந்து விண்வெளி சென்ற ஐந்தாவது நபர் என்ற பெருமை பெற்றவர் ஆவார்.
இந்தியாவிலிருந்து ஏற்கனவே விண்வெளிக்குச் சென்றவர்கள் ராகேஷ் ஷர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சிரிச பான்ட்லா ஆகியோரது வரிசையில் தற்போது சன்ஜால் பாண்டேயும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.