ஆப்கனிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் ஆப்கனிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில், நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 ஆப்கானிஸ்தானியர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளதைத் தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி விட வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் சிலரும் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்று வருகின்றனர்.
இதனால், காபூல் விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தான் மக்கள் 7 பேர் உயிரிழந்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காபூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.