இங்கிலாந்தில் ஏடிஎம் ஒன்றில் பணம் திருட முயன்ற திருடனை முதியவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவீன காலத்தில் என்னதான் விதவிதமான திருட்டு சம்பவங்கள் நடைபெற்றாலும் சில சம்பவங்கள் திருடனுக்கே மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அப்படியான சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.
இங்கிலாந்தின் கார்டிப் நகரத்திலுள்ள ஏடிஎம் ஒன்றில் 77 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பணம் எடுக்க சென்றுள்ளார். பணம் எடுத்த திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வெளியே ஒளிந்திருந்த மர்ம நபர் அவரிடமிருந்து பணத்தை பறிக்க முயன்றான்.
உடனடியாக சுதாரித்த முதியவர் திருடனுடன் குத்துச்சண்டையிட அடிவாங்கிய திருடன் அங்கிருந்த ஓடி விட்டான். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாக அது வைரலாக பரவி வருகிறது.
எதிர்த்து போராட வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து அந்த முதியவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.