ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள மசூதியொன்றின் வாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா மசூதியின் நுழைவாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் பலியானதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள ஈத் கா மசூதி அருகே, தங்களது இருபது வருட போராட்த்திற்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக தாலிபன்கள் பெரிய கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும், அப்போதுதான் மசூதியின் நுழைவு வாயிலின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்தின் தாயார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் குண்டு வெடிப்பைத்தொடர்ந்து தாலிபான்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சா.கற்பகவிக்னேஷ்வரன்