சாண்டியாகோ:-
சாண்டியாகோ கவுண்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் வந்திருக்கு கே கே கே முகமூடியை அணிந்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாண்டியாகோ கவுண்டி அருகே சாண்டி நகரில் உள்ள சூப்பர் மார்க்கெடில் காமோஃபிளாக் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு வந்த நபர் ஒருவர் KKK (Ku Klux Klan) முகமூடியை-ம் அணிந்து வந்தார்.
சூப்பர் மார்க்கெட்டில் இந்த நபரை கண்ட பலர் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர். இது வைரலானதை தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சாண்டியாகோ கவுண்டி ஷெரிப் கூறுகையில்:-
இவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை மேலும் இவர் ஏன் இந்த முகமூடியை அணிந்து வந்தார் என்ற காரணம் சரியாக தெரியவில்லை. எனவே இவர் மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார். இது ஒரு சாதாரண முகமூடிதான் மேலும் இது போன்று முகமூடிகள் அணிந்து வருவது ஒரு முட்டாள்தனமான ஒன்றாக தான் பார்க்கப் படுகிறது என்றார்.
இந்த சாண்டியாகோ நகரம் இனவாத தொடர்பான நீண்ட வரலாறு கொண்டது. இந்த முகமூடி வெள்ளை இனவாதத்தை ஆதரிக்கும் நபர்கள் அணியும் முகமூடி ஆகும். கருப்பின மக்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டும் (Anti-Black Violence) நபர்களால் இந்த முகமூடி அணியும் பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது போன்ற இனவாத குறியீடுகளை உபயோகப்படுத்தும் வழக்கம் தண்டனைக்குரியது என்றாலும் பெரும்பாலும் அமெரிக்காவில் வெள்ளையர்கள் இந்த குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் கூறுகையில்:-
நான் இந்த முகமூடியை வேண்டுமென்றே அணிந்த வரவில்லை தற்போது கருணா பரவல் காரணமாக அனைவரும் கட்டாயம் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்று வருத்தப்படுகிறார்கள் இது என்னை மிகவும் எரிச்சல் ஊட்டியது இதனால் தான் இதுபோன்ற முகமுடி அணிந்து வந்தேன் இதை நான் வேண்டுமென்றே எந்தவிதமான உள்நோக்கத்துடன் அணிந்து வரவில்லை மேலும் நான் இனவாதத்தை ஆதரிப்பவன் அல்ல என்றார்.
அமெரிக்க வரலாற்றில் கருப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகள் மிக நீண்ட வரலாறு கொண்டது. கருப்பின மக்களுக்கு எதிரான கொள்கை உடையவர்கள், மேலும் வெள்ளை இனத்தை அதிகமாக தூக்கிப் பிடிக்கும் நபர்களால் இந்த KKK முகமூடி அணியும் பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெரும்பாலானவர்கள் ரகசியமாக இதுபோன்ற கூட்டங்களில் இருப்பார்கள். அமெரிக்காவின் இந்த போன்ற செயல்கள் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதுவரை தண்டிக்கப்பட்ட தெரியவில்லை.