அபுதாபி விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பகுதியில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் தற்போது உள்ள விமான நிலையத்தில் தற்போது விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஆளில்லா டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் வழியாக பறந்து வந்த 2 ட்ரோன்கள் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் இருந்த டேங்கர் லாரி மீது மோதி வெடித்துள்ளது. இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேர், பாகிஸ்தான் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுதி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.