அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன் டிரம்பின் பல திட்டங்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் தற்போது டிரம்பின் ஒரு முக்கியமான திட்டத்தை நீக்கியுள்ளார் ஜோ பைடேன். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா பெற வேண்டும். இந்த விசாவை பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு எச்-4 விசா வழங்கப்படும்.
இதன்மூலம் எச்-1பி விசா பெற்றவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-4 விசா நடைமுறையில் வேலைவாய்ப்பு பெறுவதை ரத்து செய்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், ட்ரம்பின் உத்தரவைத் நீக்கியுள்ளார்.
இதனால் எச்-4 விசா பெற்றவர்கள் மீண்டும் அமெரிக்காவில் பணியில் சேரமுடியும் என்பதால் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த எச்-4 விசா மூலமான வேலைவாய்ப்பு நடைமுறையில் இருந்தபோது அதிகளவில் பயன்பெற்றது இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.