உலகம்

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும், உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இதனையடுத்து, இந்தியாவில் இருந்து தங்கள் நாடுகளுக்குள் கொரோனா பரவாமல் தடுக்க, குறிப்பாக புதிய வகை கொரோனா வைரஸ்கள் பரவல் தடுக்க, ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்குத் தடை விதித்துள்ளன.

தற்போது இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. மே 15 வரை இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானத்திற்கும் ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து புதிய வகை கொரோனாக்கள் தங்கள் நாட்டில் பரவும் ஆபத்தை குறைக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.


Share
ALSO READ  அமெரிக்காவிற்குள் ஐரோப்பியர்கள் வர ட்ரம்ப் தடை விதிப்பு.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேச விருது பெற்ற புகைப்படம் எது தெரியுமா???

naveen santhakumar

வீழ்ந்தது ஆப்கன்- நாட்டை விட்டு ஓடும் மக்கள்

naveen santhakumar

103 வயதில் 14000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த முதியவர்…. 

naveen santhakumar