கேன்பரா:-
உலகம் முழுவதும் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் முக்கிய தலைவர்கள் தங்கள் வீடுகளிலேயே நேரத்தை போக்கிவருகிறார்கள். இதனால் இவர்கள் இந்த லாக்டோன் நேரத்தில் ஏதாவது புதுமையான விஷயங்களை செய்து அசத்தி வருகிறார்கள்.
அதன்படி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது வீட்டில் இந்தியர்களின் முக்கிய விருப்ப உணவுகளில் ஒன்றாய சமோசாவை செய்து அசத்தியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்துள்ளார்.
அதில் இந்தியர்களின் பிரபலமான உணவான சமோசா செய்துள்ளேன் அதோடு மாங்காய் சட்னியையும் செய்துள்ளேன் இவை இரண்டும் சைவ உணவுகள் எனவே இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஷேர் செய்ய விரும்புகிறேன் என்று அதில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி நமது இரண்டு நாடுகளும் இந்திய பெருங்கடலில் இணைக்கப்பட்டுள்ளது, இந்த இந்திய சமோசாவால் ஒன்றுபட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார்.
இதனிடையே வரும் ஜூன் நான்காம் தேதி இரு தலைவர்கள் இடையே மெய்நிகர் கூட்டம் (Virtual Meeting) நடைபெற உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில் இந்தியா ஆஸ்திரேலியா உடன் நட்புறவு பாராட்டி வருகிறது என்பது இந்த சமயத்தில் குறிப்பிடத்தக்கது.