ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை எப்படி பயன்படுத்த வேண்டும்???? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் பெரியவர்களை போலவே முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.
6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்தந்த சூழலை பொறுத்து முகக்கவசம் அணியலாம் என தெரிவித்துள்ளது. அதாவது அவர்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா பரவல் உள்ளிட்டவற்றை பொறுத்து முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 5வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என உலக சுகாதார அமைப்பு(WHO) மற்றும் UNICEF தெரிவித்துள்ளது.