இணையதளங்களில் பிறந்த குழந்தை ஒன்று முறைப்பது போல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
பொதுவாக பிறந்த குழந்தைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது, கண்ணாடியில் முகத்தை காட்டக்கூடாது என அதீத நம்பிக்கைகள் உலவுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் சமீப காலங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பது சர்வ சாதாரணமான நிகழ்வாக உள்ளது.
விளம்பரங்களில் பிறந்த குழந்தைகள் நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத வீட்டில் பிறக்காது போன்றவை கூட இடம் பெற்றுள்ள நிலையில், இந்த புகைப்படம் பல மீம் கிரியேட்டர்களின் பேவரைட்டாக மாறியுள்ளது.
குறிப்பாக வடிவேலுவின் “உள்ளே ஒரே இருட்டு…ஒரு லைட்டு கூட இல்ல” காமெடி காட்சி வசனங்களை குறிப்பிட்டு அந்த குழந்தையின் வருகையை பதிவு செய்துள்ளனர்.
வழக்கமாக குழந்தை பிறந்தவுடன் அழத்தொடங்கும். ஆனால் இந்த குழந்தை அந்த டாக்டரை பார்த்து முறைப்பது போல உள்ளது.