உலகம்

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. காவல் நிலையத்திற்குள் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்புத்துறை பணியில் உள்ள அதிகாரிகள் என்றும் அந்த கட்டிடத்தின் வழியாக சென்ற ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் கொல்லப்பட்டதாகவும் ஹயாத் கூறியுள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதலுக்கான காரணத்தை அறிய போலீசார் மற்றும் விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புகிறோம்- தாலிபான் அறிவிப்பு...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரண்டு கற்கள் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரரான தொழிலாளி… 

naveen santhakumar

கொரோனா தடுப்பூசியை சோதனை செய்கிறது பில்கேட்ஸ் அறக்கட்டளை….

naveen santhakumar

பிறந்தநாளில் இறந்த கணவன்; மறுநாளை குழந்தை பெற்ற பெண்- அமெரிக்காவில் நெகிழ்ச்சி சம்பவம்…

naveen santhakumar