வாவ்.. நெருப்பு அருவியைப் பார்த்து இருக்கிங்களா?
பொதுவாக நாம் அனைவருக்கும் சுற்றுலா செல்வது என்பது பிடித்தமான ஒன்று. அதிலும் உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 அதிசயமான இடங்கள் உள்ளது. அதில் பாரிஸ், பைசா நகரின் சாய்ந்த கோபுரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் சில இடங்கள் அதிசயத்தின் வரிசையில் சேர்க்கப் படவில்லை என்றாலும் பார்ப்பவர்களை மெய் மறக்கத் தான் வைக்கிறது.
அப்படி ஒன்றுதான் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் யோஸ்மைட் பூங்கா.இங்குள்ள ஆயிரம் அடி கொண்ட அருவியைக் காண மக்கள் வந்த வண்ணமே இருப்பார்கள்.1880 களில் இருந்தே யோஸ்மைட் பூங்கா மக்களுக்கு மிகவும் பிடித்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
அப்படி என்ன இந்த பூங்காவில் ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா?
இந்த பூங்காவில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் தீப்பிழம்பாக அருவி கொட்டுமாம். பிப்ரவரி மாதத்தின் கடைசி 2 வாரங்களில் சூரியன் மறையும் போது ஒரு கோட்டில் சூரியனின் கதிர்கள் இந்த நீர்வீழ்ச்சியின் மீது பிரதிபலித்து இது ஒரு தீப்பிழம்பு போல் காட்சியளிக்கின்றது.
இதனை பார்ப்பதற்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.