தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஒட்டாவா:
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது.இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் கனடா வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. ஏறத்தாழ 1 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா, அமெரிக்காவுடனான எல்லையை திறக்க உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.