தற்போது ஒட்டுமொத்த உலகையும் கவலையில் ஆழ்த்தியுள்ள தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரானா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தொற்றால், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும், 15 முதல் 19 வயது வரை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவுக் கூறப்படுகிறது.
இது குறித்து தென் ஆப்பிரிக்கா தேசிய தொற்று நோயியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் வாசிலா ஜசட் கூறுகையில்,
கொரோனா முதல் இரண்டு அலையின் போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை.
அதனால் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு வரவில்லை. ஆனால் தற்போதைய ஒமைக்ரான் பரவலில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 15 – 19 வயதில் உள்ள இளம் வயதினரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஒரு சில வாரங்களில் அது குறித்த விபரங்கள் தெரியவரும் என்று கூறினார்.
மேலும், இந்த முறை குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணம் குறித்து ஆய்வு நடக்கிறது. தடுப்பூசி போடாதோர் மட்டுமின்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.