இஸ்லாமாபாத் :
சீனாவின் பாதுகாப்பு அமைச்சரும் ராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே,பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை பார்வையிட்ட ஜெனரல் வே, பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்தித்து பேசினார்.
அப்போது இருவரும் புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இது குறித்து சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவங்களுக்கு இடையேயிலான உறவுகள் தொழில் நுட்பம், உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பிற பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பாகிஸ்தானின் ராணுவ திறனை கட்டமைக்கும் வகையில் இந்த சுற்றுப் பயணம் அமைநுதுள்ளது.சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோரை சந்தித்து பேசினார்.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் சீனா-பாகிஸ்தான் இடையேயான இந்த புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.