கனடாவில் இருந்து வந்த பார்சல் மூலமாக சீனாவில் ஒமைக்ரான் தொற்று பரவியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை குற்றச்சாட்டியுள்ளது.
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் தொற்று கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சீனாவில் வெளிநாட்டில் இருந்து வரும் பார்சல்களை ஆய்வு செய்து பார்த்ததில் அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
கனடாவில் இருந்து வந்த பார்சல் மற்றும் அதன் உள்ளிருந்த பொருட்கள், ஆவணங்கள் ஆகியவற்றில் ஒமைக்ரான் வைரஸ் இருந்ததாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 11ம் தேதி கனடாவில் இருந்து வந்த பார்சலை டெலிவரி வாங்கிய சீன நபருக்கு கடந்த 15ம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வாங்கிய பார்சலை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கடந்த 7ம் தேதி கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட அந்த பார்சல் அமெரிக்கா, ஹாங்காங் வழியாக சீனாவின் தலைநகரான் பெய்ஜிங்கிற்கு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜனவரி 11ம் தேதி அந்த பார்சலை டெலிவரி வாங்கிய நபருக்கு, ஜனவரி 15ம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.