சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனையடுத்து இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில்,கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients #Newzealand