தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மாஸ்கோ:
ரஷ்ய நாட்டின் அதிபர் மாளிகையான கிரெம்ளினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரெம்ளினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கிரெம்ளின் மாளிகையில் வசித்து வரும் ரஷ்ய நாட்டின் அதிபர் புடினும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய நாட்டின் அதிபர் புடின் தஜகிஸ்தான் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. கிரெம்ளினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ததால் அதிபர் புடின் தஜகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இச்சூழலில் ரஷ்ய நாட்டின் அதிபர் புடினுக்கு கொரானா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக கிரெம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.