சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். மேலும் இந்த நோய் தொற்றினால் மக்கள்கள் தொடங்கி உலக தலைவர்கள் வரை பதித்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தற்போது தான் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தடுப்பூசிகள் சீனாவில் உருவாக்கப்பட்டதாகும். இந்த தடுப்பூசியின் முதல் டோஸை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 18 ஆம் தேதி செலுத்திக்கொண்டார்.
இந்தநிலையில் இன்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று உறுதியாகிவுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது