உலகம்

அமெரிக்காவில் கருப்பினத்தவர் நடுரோட்டில் கழுத்தில் காலை வைத்து தாக்கி கொன்ற போலீசார்- கலவர பூமியான அமெரிக்கா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மின்னசோட்டா:-

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவரின் மீது போலீசார் இனவெறி தாக்குதல் நடத்தி கொலை செய்ததாகக் கூறி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. 

இந்நிலையில்  கலவரக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதற்கு கலவரக்காரர்களும் எதிர் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே கலவர பூமியாக மாறியது.  

வெள்ளை இனத்தை சேர்ந்த போலீசார் 4 பேர் பொது இடத்தில் மினசோட்டா மாகாணத்தில், ஜோர்ஜ் ப்லோய்ட் என்ற கறுப்பின நபரை கீழே தள்ளி கழுத்தின் மீது தங்களது கால்களை மடக்கி தாக்குதல் நடத்தினர். இதில் கழுத்தின் மீது காலை வைத்த போலீஸ் டெரெக் சாவின் (Derek Chauvin) என்று அடையாளம் காணப்பட்டார்.

இதில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆத்திரம் அடைந்த மக்கள் லாஸ் ஏஞ்சல் நகரில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். 

ALSO READ  காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்… காவல்துறை அதிரடி!
courtesy.

இந்நிலையில் இச்சம்பவத்தில்  குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீசாரும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேபாள பள்ளிகளில் சீன மொழி கட்டாயம்…

naveen santhakumar

டிரம்பின் தனி வழக்கறிஞருக்கு கொரோனா :

naveen santhakumar

பஞ்சஷீரில் தாலிபான்களில் 600 பேரைக் கொன்றும், 1000 பேரை சிறை பிடித்ததாகவும் வடக்குப் படைகள் அறிவிப்பு..!

Admin