குருகிராமில் இருந்து அட்வென்சர் ஓவர்லேண்ட்(adventure overland) என்கிற சுற்றுலா நிறுவனமானது, நீண்ட தூரத்திற்கான பேருந்து பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில்(delhi) இருந்து, லண்டன்(london) நாட்டிற்கு 18 நாடுகளின் வழியாக செல்லும் பயணத்தை இந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
டெல்லியில் இருந்து லண்டன் செல்ல மொத்தமாக சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய நேரலாம்.
இதற்காக மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, ரஷியா, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை கடந்து இப்பேருந்து பயணம் செய்தாக வேண்டும்.இந்த பேருந்து பயணத்திற்கு நபருக்கு ரூ.15 இலட்சம் கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.என்ன பாஸ்கரன்… விலையை கேட்டதும் தலையே சுத்துதா????
மேலும், இந்த பேருந்தில் பயணம் செய்ய 20 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. முழு பயணத்திற்கும் கட்டணம் தரும் பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
தங்களது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சிறப்பான மற்றும் சொகுசான முறையில் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது என்றும், இந்த பயணத்திற்கு 15 விசாக்கள் தேவைப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.