உலகம்

இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பிரார்த்தனை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகருக்கான இருப்பிடத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக குத்து விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி, பின்னர் அமைதி வேண்டி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்கான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இங்கிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாயில், “உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து சமூகங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெற வாழ்த்துக்கள்” என்று தனது பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தார்.


Share
ALSO READ  இன்று முதல் 3 நாட்களுக்கு ரேஷன் நேரம் மாற்றம் …!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா…. இத try பண்ணுங்க…

Admin

கொரோனாவால் இத்தாலியில் பிரபலமாகும் பழங்கால ‘Wine Window’…

naveen santhakumar

111 நாடுகளில் பரவிய ‘டெல்டா’ வைரஸ் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

News Editor