உலகம்

‘எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கு, இப்போ உங்களுக்கும்’… போலீசார் மீது வேண்டுமென்றேவஇருமிய இளைஞர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லெய்டன்:-

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் நெதர்லாந்து நாட்டில் குடிகார இளைஞர் ஒருவர் இரண்டு போலீசார் மீது வேண்டுமென்றே இருமிய (Coughing) குற்றத்திற்காக 10 வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் லெய்டன் நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர் மது அருந்தியுள்ளாரா என்று சோதித்துள்ளனர்.  

ALSO READ  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட கொரோனா !

போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்த அந்த குடிகார இளைஞர் போலீசாரின் மீது வேண்டுமென்றே இருமி ‘எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது, இப்பொழுது உங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது’ என்று போலீசாருக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர் மீது ‘மரண அச்சுறுத்தல் மற்றும் எதிர்பாராத திடீர் தாக்குதல்’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு 10 வாரங்கள் ஜெயிலில் அடைத்தனர். 

ALSO READ  ஊரடங்கு நீட்டிப்பு; ஜூன் முதல் இலவச மளிகை வழங்க உத்தரவு !

இதற்கிடையே அந்த இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றி இல்லை என்று தெரியவந்தது.

இதனிடையே நெதர்லாந்து நாட்டில் இதுவரை 3000 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 103 பேர் வரை உயிரிழந்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட கொரோனா தொற்றை பரப்பலாம்

News Editor

தண்ணீருக்கே தடுமாறும் மக்கள்… இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை…

naveen santhakumar

தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்ட சீக்கிய அமைப்பு: கனடா அதிரடி… 

naveen santhakumar