தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தோனேசியா :
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று(17.11.2020) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கமானது 100 கி.மீ. தொலைவிலும், 10 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதன் காரணமாக மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இன்னும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும் சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.