ஜெனீவா
ஒமைக்ரான் தொற்று அச்சத்தால், தடுப்பூசி வினியோகம் தடைபட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல மாதங்களாக கொரோனா தடுப்பூசி வினியோகம் தடைபட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாகத்தான் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சீராக கிடைத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது ஒமைக்ரான் தொற்று பற்றிய அச்சத்தால், தடுப்பூசி வினியோகம் மீண்டும் தடைபடும் என்று அஞ்சுகிறோம் என்றும் பெரும் பணக்கார நாடுகள் தங்கள் தேவைக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் சூழ்நிலை உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி துறை தலைவர் டாக்டர் கேத் ஓ பிரையன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மற்ற ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் உள்ளதோடு அங்கு தொற்று பரவல் அதிகரித்து, உருமாறிய வைரஸ்கள் உருவாக வழிவகுக்கும். என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூஸ்டர் டோஸ் எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போடுவதாலும் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காதநிலை ஏற்படும் என்று டாக்டர் கேத் ஓ பிரையன் தெரிவித்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.