உலகம்

சிறையில் கைதிகள்-காவலர்கள் இடையே மோதல்…8 பேர் உயிரிழப்பு…24 பேர் காயம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொழும்பு :

கொழும்பு நகரம் அருகே மகாரா என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையிலுள்ள இடவசதியை விட அதிகளவில் கைதிகள் இருந்தனர்.

கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படும் நிலை உருவானது.ஆகையால் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றும், பல கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கைதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ALSO READ  பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா - புது ரூட்டில் ஜெயிலுக்குள் கஞ்சா சப்ளை!

அதற்கு சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர்.அவர்களை சிறை காவலர்கள் அடக்க முற்பட்டனர்.திடீரென்று அது கைதிகள் மற்றும் காவலர்கள் மோதலாக மாறியது.

கடுமையான வன்முறை நடந்தததால் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 கைதிகள் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு அதிகளவில் போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி கிடையாது- சவுதி அரேபியா…

naveen santhakumar

காதலிக்க மறுத்த மாணவி மீது கொடூர தாக்குதல்

Admin

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு:

naveen santhakumar