லண்டன்:-
உலகில் முதன்முதலாக கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைக்கு பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனாவை தடுப்பதற்கு பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இதுவரை எந்த நாட்டிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மாத்திரை எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்நிலையில், Merck, Ridgeback Biotherapeutics ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவின் மெர்க்ஸ் நிறுவனம் கொரோனாவை குணப்படுத்தும் ‘மால்னுபிரவிர்’ மாத்திரையை தயாரித்துள்ளது, அதன் தரவு மற்றும் ஆய்வு முடிவுகளை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்திடம் (எப்.டி.ஏ.,) சமர்ப்பித்து அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கொரோனா பாதிப்பு உறுதியானவுடன் அல்லது அறிகுறி தோன்றியவுடன் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினம் இரண்டு வேளையாக இம்மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொரோனா அறிகுறியை குறைத்து தீவிரமடையாமலும், உயிரிழப்பு ஏற்படாமலும் தடுக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.