வாஷிங்டன்:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தது வருகிறது. பல கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் இன்னும் கொரோனா தொற்றில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதற்கு மாற்று என்பது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய நிலை. வளர்ந்த நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்ததன் விளைவுவாக பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள தயங்கி வருகின்றனர். இந்தியாவில் இன்னும் பெருமளவு மக்கள் தடுப்பூசி போடாத நிலையே உள்ளது. அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
நகர பகுதிகளில் 60 சதவிகிதம் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். கிராமப்புற பகுதிகளில் மிகுந்த தேக்க நிலையே உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பணியாளர்களின் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தில் கொரோனா தொற்றில் பாதித்த பணியாளரின் மருத்துவ சிகிச்சைக்கு 37 லட்சம் ரூபாய் செலவாகிறது. எனவே தான் மாதம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுவிடாமல் இருக்க இன்றே கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள செல்லுங்கள்.