புனே
இந்தியாவில் தயாராகும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 17 ஐரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகாரம் அளிக்காமல் இருந்ததால் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 17 ஐரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாணவர்கள், தொழில்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்
இது தொடர்பாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா வெளியிட்ட அறிக்கையில்,
‘ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 உறுப்பு நாடுகளில் 16 நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து (ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதி அல்ல) ஆகிய நாடுகள் அவசரகால பயன்பாட்டு பட்டியலின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இன்றைய நிலையில், ஒவ்வொரு ஐரோப்பிய யூனியன் நாடுகளும் கோவிஷீல்டை ஏற்றுக்கொண்டு வருகின்றன, இருந்தாலும், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசி மிகுந்த செயல்திறன் மிக்கது என்பதை ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் எங்களது தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்