உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இவ்வாறு முடங்கிக் கிடப்பதால் பெரும் சலிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
பெரும்பாலானோர் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப் வீடியோக்கள் என்று தங்கள் நேரத்தை போக்கி வருகிறார்கள்.
நமது தூர்தர்ஷன் ‘ராமாயண சீரியலை’ ஒளிபரப்புகிறது. இதையும் பலர் பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களுக்காக ஆக்குமெண்டேஷன் ரியாலிட்டி (Augmented Reality (AR)) உதவியுடன் 3D விலங்குகளை வீட்டிலிருந்தபடியே பார்ப்பதற்காக வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
நீங்கள் கூகுள் க்ரோமில் சென்று உங்களுக்கு பிடித்த விலங்குகளை டைப் செய்தால் அந்த விலங்கு படத்துடன் கீழே 3D-யில் காண்பதற்கான ஐகான் வரும். அதை கிளிக் செய்தால் அந்த விலங்குகளை 3D இல் காணலாம்.
தற்போது சிங்கம், புலி, கரடி, ஓநாய், சுறா, பென்குயின், முதலை, கழுகு, ஆமை போன்ற பல்வேறு விலங்குகளின் 3D படங்களை கிடைக்கிறது.
இந்த வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷன் 7.0 மற்றும் IOS-ல் 11.0 பின் வந்த அனைத்து மொபைல், டேப்லெட்களிலும் கிடைக்கிறது.