தாய்லாந்தில் அறிமுகமாகும் ஹோண்டா சிட்டி கார்
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் முதல்முறையாக தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் பல மாதங்களாக சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இன்று தாய்லாந்தில் முதல்முறையாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்திலும், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்திலும் அவ்வப்போது புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
வடிவமைப்பிலும், வசதிகளிலும் இந்த கார் முற்றிலும் மாறுபட்ட மாடலாக வர இருக்கிறது. தற்போதைய மாடலைவிட புதிய தலைமுறை சிட்டி கார் நீளத்தில் 100 மிமீ வரையிலும், அகலத்தில் 53 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளையில், உயரம் 28 மிமீ வரையிலும், வீல் பேஸ் நீளம் 11 மிமீ வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.