மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர்.
அதனையடுத்து விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஹேலி ஸ்டீவன்ஸ், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், “பொதுவாக, இந்தியச் சந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது” எனக் என்றார். விவசாயிகளின் போராட்டம் பற்றி, “அமைதியான போராட்டங்கள் எந்தவொரு வளர்ந்து வரும் ஜனநாயகத்திற்கும் அடையாளமாக இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்திய உச்சநீதிமன்றமும் அதையே கூறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எந்தவொரு பிரச்சனையும் பேசி தீர்க்கப்பட வேண்டும்” என கூறினார்.