உய்குர் முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மை இன மக்கள் சீனாவின் வதை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதை உலகிற்கு அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜகோபாலன் மற்றும் அவரது குழுவினர் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் 3 டி கட்டடக்கலை உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி, தடுப்பு முகாம்களில் உய்குர் முஸ்லீம்கள் மற்றும் பிற சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை வெளியுலகிற்கு அமபலப்படுத்தினார்.
அலிசன் கில்லிங் மற்றும் கிறிஸ்டோ புஷெக் ஆகியோருடன் இணைந்து தணிக்கை செய்யப்பட்ட சீன படங்களை தணிக்கை செய்யப்படாத வரைப்பட மென்பொருள், மற்றும் முகாம்களிலிருந்து தப்பியோரிடமிருந்து தகவல்களை பெற்று வதைமுகாம்களில் சீனா இனப்படுகொலை செய்வதை வெளியுலகிற்கு காட்டியுள்ளார்.
மேகா ராஜகோபாலன் புலிட்சர் பரிசை வென்ற பிறகு தந்தையிடமிருந்து ஒரு அழகான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இதேபோல, மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர், நீல் பேடி, குழந்தைகளை கண்காணிக்க புளோரிடாவில் ஒரு சட்ட அமலாக்க அதிகாரி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை அம்பலப்படுத்திய தம்பா பே டைம்ஸில் ஒரு ஆசிரியருடன் அவர் எழுதிய விசாரணைக் கட்டுரைகளுக்காக புலிட்சர் பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.