புனோம் பென்:-
கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருகிறது.
இதன்படி கம்போடியாவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக கம்போடிய தலைநகர் புனோம் பென்னிலிருந்து டெல்லிக்கு வந்தே பாரத் மிஷன் கீழ் இரண்டு விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புனோம் பென் விமான நிலையத்திலிருந்து ஜூன் 10 ஆம் தேதி பசாகா ஏர் சார்ட்டர் விமான எண் 5B2011 அல்லது ஏர் இந்தியா விமான (Air India Evacuation Flight) எண் AI 1303 மற்றும் ஜூன் 19 அன்றும் உங்கள் இயக்கப்பட உள்ளது
இதையடுத்து வழக்கில் உள்ள அல்லது காலாவதியான விசாவுடன் யாராவது பாஸ்போர்ட்டை வைத்திருந்தால், அவர்கள் கம்போடியாவிலிருந்து வெளியேற விசாவை நீட்டிப்பதற்காக புனோம் பென் விமான நிலையத்தின் அமைந்துள்ள குடியேற்றத் துறை (Immigration Office) அலுவலகத்தை அணுகி நீட்டித்துக் கொள்ளலாம்.
அதேவேளையில் முறையான ஆவணங்கள் இல்லாத நபர்கள் கம்போடிய நாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கம்போடிய விமான நிலைய குடியேற்ம துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலை கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் தமிழ் சங்க துணைத்தலைவர் திரு.ரமேஷ்வரன் தெரிவித்தார்.