கிறிஸ்துமஸை முன்னிட்டு “வியட்நாம்” செல்ல சிறப்பு சலுகைகள் வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒரு மாதம் காலமே உள்ளதால் இப்போது இருந்தே கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் உள்ளிட்ட கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பரிசாக ஐ.ஆர்.சி.டி.சி “வியட்நாம்” செல்ல சிறப்பு சலுகைகள் வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி.யின் இந்த வியட்நாம் சுற்றுப்பயணம் டிசம்பர் 23 தொடங்குவதால் ஏராளமானோர் இதற்கு முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 5 நாட்கள் பயணத்தில் நாம் முதல் நாளில் காலை 10:30 மணிக்கு கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹனோய் விமானத்தில் பயணம் செய்வார்கள். அங்கு சென்றதும் நீங்கள் ஹோ சி மின் கல்லறை, மாமா ஹோவின் வீடு, ஒரு தூண் பகோடா மற்றும் இலக்கிய ஆலயம் ஆகியவற்றை பார்வையிடலாம்.
2ம் நாளில் வியட்நாமின் பசுமையான வயல்கள் வழியாக 100 கி.மீ பயணத்தைத் தொடங்கி பாய் டின் பகோடா வளாகங்களான ட்ராங் ஆன் க்ரோட்டோஸை பார்வையிட்டும், 3ம் நாளில் பின்னர் கடல் பரப்பான ஹாலோங் பே குரூசுக்கு செல்வீர்கள். அங்கு உங்களுக்கு சுவையான கடல் உணவுகள் கிடைக்கும்.
அப்படியே கிரோட்டோவைப் பார்வையிட கடலினுள் சென்று மாலை கரைக்கு திரும்பலாம். இங்கு நீங்கள் வெதுவெதுப்பான நீரில் நீந்தியும், துடுப்பு படகில் சென்றும் அதன் அழகை ரசிக்கலாம். 4ம் நாளில் நீங்கள் அருகிலுள்ள குன்றின் மேல் ஏறி சூரிய உதயம் பார்க்கலாம். பின் சூரிய குளியலிலும் ஈடுபடலாம். 5ம் நாள் நீங்கள் இந்தியா திரும்பிச்செல்லும்படி அந்த பயண விவரத்தில் குறிப்பிடபட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு நபர் ஒருவருக்கு ரூ.63500 , ;இரண்டு (அ) 3 பேர் கொண்ட குழுவில் நபர் ஒருவருக்கு ரூ.49100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.