ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பு தங்களது ஜிகாதிகளுக்கு சில அறிவுறைகளை கூறியுள்ளது. அதன்படி தங்கள் கைகளை அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும் நள்ளிரவில் கண் விழித்தாலும் கட்டாயம் கைகளைகழுவ வேண்டும் என்று கூறியுள்ளது.
உலக அளவில் கொலைகள், வன்புணர்வு, சித்திரவதை, பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு பெயர் போனவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்களது ஜிகாதிகளுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. இது அல்-நாபா பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
அந்த கடிதத்தில் கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து தங்கள் ஜிகாதிகளை விலகி இருக்குமாறு கூறி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
அதே போல் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவவும், நள்ளிரவில் தூக்கத்திலிருந்து விழித்தாழும் கைகளை கழுவ வேண்டும் என்று கூறி உள்ளது.
மேலும் முகத்தை மூடவும், நீருள்ள பாத்திரங்களை மூடி வைக்குமாறும் கூறியுள்ளது. தும்மல் வரும்பொழுது மூக்கு மற்றும் வாய் மூடி கொள்ளுமாறு கூறி உள்ளது.
பலரது தலைகளை ஈவு ஈவு இரக்கமின்றி கொய்த போதும், பலரை உயிருடன் எரித்த போதும், பல பெண்களை வன்புணர்வு செய்த போதும் என்று எதற்கும் அஞ்சாத ஐஎஸ்ஐஎஸ், தற்போது அஞ்சுவது கொரோனாவுக்கு என்று மாறியுள்ளது.