ஜெருசலேம்:-
முகக்கவசம் அணிவதற்கான விதிகள் நீக்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் வீதம் குறைவாக இருப்பதால் ஜூன் 15 முதல் இஸ்ரேலியர்கள் வெளியில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இருக்காது என்று சுகாதார அமைச்சர் யூலி எடெல்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உள் அரங்கங்களில் இனி முக கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் 600,000 12-15 வயதுடையவர்கள் உள்ளனர், இதில் இதுவரை 10,000 தடுப்பூசி செலுத்துவதற்கான 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.